மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு – ‘இந்த’ நாளில் பணம் டெபாசிட்!
இந்தியாவில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தவணை தொகையை பெற இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பது அவசியமாகும். தற்போது 11 வது தவணைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிசான் திட்டம்:
இந்தியாவில் வேளாண் தொழில் முதன்மை தொழிலாக உள்ளது. ஏராளமானோர் வேளாண் தொழிலை நம்பியே இருக்கின்றனர். வேளாண் தொழிலையும் விவசாயிகளை காக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் புதிய நல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல திட்டங்களை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் இடு பொருட்களை வாங்கும் பொருட்டு கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த தொகை விவசாயிகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் 3 கட்டங்களாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பிஎம் கிசான் திட்டத்தில் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. 10ஆவது தவணைத் தொகை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செலுத்தப்பட்டது. அடுத்ததாக 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 11வது தவணைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே கடந்த 14ம் தேதி 11 – வது தவணைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வரவு வைக்கப்படவில்லை.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இந்நிலையில் வரும் மே 31 ஆம் தேதி 11 வது தவணை வங்கி கணக்கில் செலுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தவணைத்தொகையை பெற eKYC செயல்முறையை முடிப்பது அவசியமாகும். pmkisan.gov.in என்ற இணையதளத்தில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு ஒடிபி send செய்ய வேண்டும். அதனை டைப் செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு உங்கள் இ-கேஒய்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு விடும்.