TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முறை, பாடத்திட்டம் குறித்த விவரம் இதோ!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 30ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த விளக்கத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
TNUSRB தேர்வு
தமிழகத்தில் மாநகர ஆயுதப்படை பிரிவில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தமாக இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் 10ம் வகுப்பு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதற்கான விண்ணப்ப பதிவானது கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறு நிதி வங்கிகளில் 7% வரை சேமிப்பு கணக்கில் வட்டி – முழு விவரம் இதோ!
விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் வயது வரம்பு 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆனால் பாடத்திட்டம் தேர்வு முறைகள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் TNUSRB PC தேர்வில் வினாத்தாள் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டு, தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாய தொண்டு ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த பகுதியில் 40% மதிப்பெண்கள் பெறுவது அவசியம். இல்லையெனில் முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படாது. அடுத்த பகுதியில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும். மேலும் உடற்கூறு தேர்விற்கும் மதிப்பெண்கள் உண்டு. தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை படிப்பது நல்லது.