TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – அரசின் புதிய செயலி அறிமுகம்!
எப்போதும் தகுதி தேர்விற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அந்தந்த இணையதள முகவரிக்கு தான் செல்லவேண்டும். ஆனால், தற்போது விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்க ஒரு கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கைபேசி செயலி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதித்தேர்வு நடத்தி அந்த தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் எந்த தகுதி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் பணியிடங்களும் நிரப்பப் படாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா சற்று சரிந்த காரணத்தினால் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு மே 21ம் தேதியும், குரூப்-4 தேர்வு ஜூலை 2ம் தேதியும் நடைபெற இருக்கிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அந்தெந்த அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்கு சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் சிரமத்தை எளிமையாக்க தற்போது தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க ஒரு செயலியை அறிமுகப்படுத்துவதாக தமிழக அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதாவது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஒரு செயலியை அறிமுகப்படுத்தப்படும் எனவும், தேர்வு குறித்த அறிவிப்பு, தேர்விற்குரிய பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகிய அனைத்துமே இந்த செயலின் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் தகுதி தேர்விற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய அந்தந்த இணையதள முகவரிக்கு தான் செல்லவேண்டும் ஆனால் தற்போது விண்ணப்பதாரர்களின் சிரமத்தை குறைக்க ஒரு கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.