TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு 2022 – ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டம்!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு 2022 - ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டம்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு 2022 - ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டம்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு 2022 – ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இத்தேர்வு ஜூலை இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுகிறது. இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடைவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு இத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன்படி தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதார்கள் பதிவு செய்திருந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு விரைவில் 15% சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இத்தேர்வு கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தேர்வு குறித்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வுகள் முடிந்ததும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி இத்தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!