TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – விரைவில் முடிவுக்கு வரும் WHF முறை? முழு விவரம் இதோ!
TCS நிறுவன ஊழியர்கள் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை முடித்து வெகு சீக்கிரத்தில் அலுவலகத்திற்கு திரும்பலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.
WHF முறை
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு அழைக்கும் முடிவை துரிதப்படுகிறது. இது குறித்த அறிக்கையின்படி, இதுவரை நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 20% பேர் இப்போது அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள்.அந்த வகையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இப்போது முடிவுக்கு வர இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் கடந்த பன்னிரெண்டு மாத அடிப்படையில் இந்த நிறுவனத்தின் தேய்மானம் 19.7% ஆக இருந்தது. அதே நேரத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் டிசிஎஸ் நிறுவனம் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளது. அதாவது TCSன் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 6 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது கடந்த ஜூன் 31 மாத நிலவரப்படி இந்நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 606,331 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து TCS நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என் கணபதி சுப்ரமணியம் கூறுகையில், ‘பல மாற்ற திட்டங்களை கடந்த காலாண்டில் வெற்றிகரமாக செயல்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஜவுளி அமைச்சகத்தில் 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.92,300/- வரை மாத ஊதியம்!
மக்கள் மீது நாங்கள் செய்த முதலீடுகள், திறன்களை மேம்படுத்தும் முயற்சிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கவாட்டு பணியமர்த்தல் ஆகியவை எங்கள் செயல்பாடுகளில் குறைந்தபட்ச தாக்கத்துடன் திறமை வருவாயை நிர்வகிக்க உதவியது. இதற்கிடையில் வருடாந்திர இழப்பீட்டு மதிப்பாய்வைத் தொடர்ந்து, ஊழியர்கள் 5 முதல் 8% வரை சம்பள உயர்வைப் பெற்றனர். மேலும் சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் இன்னும் பெரிய உயர்வைப் பெறுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.