தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த சான்றிதழை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக ஓய்வூதியதார்களின் வீட்டிற்கு சென்று பெற்று கொள்ள தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

வாழ்நாள் சான்றிதழ்:

தமிழகத்தில் அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியற்ற நபர்கள் பயன்பெற்று வருவதாகவும் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் முறைகேடுகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதன்படி தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 1) முதல் வங்கி சேவைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் – முழு விவரம் இதோ!

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வாழ்நாள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாக சென்று பதிவு செய்யலாம். இதையடுத்து தபால் மூலமாகவோ அல்லது மின்னணு விரல்ரேகை சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலமாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓய்வூதியதாரர்கள் நேரடியாக வந்து சான்றிதழை சமர்ப்பிக்க கடந்த 2 ஆண்டுகளாக விலக்கு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதத்தில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்களின் இல்லத்திற்கு சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலமாக அவர்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின்படி IPPB வங்கி ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழை ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக பெற்று கொள்கிறது. இதற்கு கட்டணமாக ஓய்வூதியதார்கள் ரூ.70 செலுத்த வேண்டும். அதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக நிதியமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!