நாளை (ஜூன் 1) முதல் வங்கி சேவைகளில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் – முழு விவரம் இதோ!
மே மாதம் முடிந்து ஜூன் மாதம் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஜூன் மாதம் முதல் வங்கி சேவையில் சில மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றங்கள் மூலம் சாமானியர் பாதிப்பு அடைவார்களா? அல்லது பலன் அடைவார்களா? என்பதை விளக்கமாக இப்பதிவில் பார்க்கலாம்.
முக்கிய மாற்றங்கள்:
SBI வீட்டுக் கடன் விகிதம்: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக வீட்டுக்கடன்கள் மீதான EBLR வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை எஸ்பிஐ வீட்டுக் கடன்கள் மீதான EBLR வட்டி விகிதம் 6.65% ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது EBLR வட்டி 0.50% உயர்த்தப்பட்டு 7.5% ஆக அதிகரித்துள்ளது. இதே RLLR விகிதம் 6.65% ஆக இருக்கும். இதனால் இனி வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு EMI தொகை அதிகரிக்கலாம்.
Exams Daily Mobile App Download
ஆக்சிஸ் சேமிப்பு கணக்கு கட்டணங்கள்: தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க், சேமிப்புக் கணக்கு மற்றும் சம்பளக் கணக்குதாரர்களுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய சேவைக் கட்டணங்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஆக்ஸிஸ் பேங்க் தெரிவித்துள்ளது. இதன் மூலம்,எல்லா சேமிப்பு கணக்குகளுக்கும் சராசரி மாத இருப்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம் சேமிப்பு கணக்குகளுக்கு சராசரி மாத இருப்பு தொகை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் லிபர்ட்டி சேமிப்பு கணக்குகளுக்கு சராசரி மாத இருப்பு தொகை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி – அபராதம்: இதில் குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்கு மாதம் குறைந்தபட்சம் 75 ரூபாயும், அதிகபட்சமாக 600 ரூபாயும் வசூலிக்கப்படும், செமி அர்பன் பகுதிகளில் அதிகபட்சமாக 300 ரூபாயும், கிராமப்புறங்களில் 250 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அஞ்சலக சேமிப்பு கணக்கில் மாற்றம் : அஞ்சலக கணக்கின் மூலம் ஆதார் மூலமான பரிவர்த்தனைகளை (AePS) சேவைகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 3 AePS சேவைகளுக்கு மட்டுமே இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதிமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
அஞ்சலக சேமிப்பு கணக்கில் கட்டணம் : இதில் கேஸ் டெபாசிட், மினி ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்தல், பணம் டெபாசிட் செய்தல் என அனைத்திற்கும் 20+ ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்படலாம். இதில் மினி ஸ்டேட்மெண்ட்டுக்கு 5 ரூபாய்+ ஜிஎஸ்டியும் கிடைக்கும். இது ஜூன் 15,2022 முதல் அமலுக்கு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.