தமிழக 10 &12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்!

0
தமிழக 10 &12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்!
தமிழக 10 &12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்!தமிழக 10 &12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்!
தமிழக 10 &12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவது தொடர்பாக பல கோரிக்கைகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.

சிறப்பு வகுப்புகள்:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்ற காரணத்தினால் இந்த கல்வி ஆண்டு முழுக்க அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும்போது காலை 8:30 மணிக்கு தொடங்கி மாலை 4:15 முதல் 5.30 மணிக்குள் கண்டிப்பாக சிறப்பு வகுப்புகளை நடத்தி முடித்துவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏதேனும் தகவலை பகிர விரும்பினால் வாட்ஸ்ஆப் குரூப்பில் மட்டுமே பகிர வேண்டும். தனித்துவமாக அந்த மாணவனுக்கு மட்டும் எந்த செய்தியையும் பகிர கூடாது என அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால் உடனடியாக அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பள்ளிகளில் உள்ள புகார் பெட்டியை ஆய்வுசெய்து பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டட சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு சுகாதார சான்று ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த பிரச்சினைகள் வரவே கூடாது எனவும் பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளியின் தரத்தை மேம்படுத்துவதில் தலைமை ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்தும் படியும் பள்ளிக்கல்வித்துறை அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!