SBI வங்கியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – ப்ராசசிங் கட்டணம் தள்ளுபடி!
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் ப்ராசசிங் கட்டணத்தில் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்ப்போம்.
கடன் தள்ளுபடி:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் மிகவும் நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் நிதி நிலையை சமாளிக்க வங்கிகளில் கடன் பெற்றனர். அதிலும் குறிப்பாக தங்க நகைகளை அடமானம் வைத்து அதன் மூலமாக கடன் பெற்று வந்தனர். மேலும் பெரும்பாலானோர் நகைகளை அடமானம் வைத்தே கடன் பெற்று வந்தனர். ஏனெனில் இதற்கு குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்கப்படும். அதனால் ஈஸியாக வட்டி செலுத்தி நகைகளை மீட்டுக் கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் நகைக்கடன்களை பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது பெரும்பாலான வங்கிகளில் தங்க நகைக்கடனுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடனில் சில தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக நகைக் கடன்களுக்கான ப்ராசசிங் கட்டணத்தில் 50% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில் சாமானிய மக்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஆன்லைன் மூலமாக அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் SBI YONO App ஒன்றை கொண்டு வந்துள்ளது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
அதன்படி தற்போது நகைக்கடனுக்கு விண்ணப்பிக்க இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தனது அறிவிப்பில், SBI வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக 20,000 ரூபாயும் மற்றும் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்த ஃபிளக்சிபிள் ஆப்ஷன்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையில் 0.25% ப்ராசசிங் கட்டணமாக வசூலிக்கப்படும். அத்துடன் குறைந்தபட்சமாக ரூ.250 ஜிஎஸ்டியுடன் சேர்த்து ப்ராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் நகைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம்.