SBI வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
இந்தியாவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள டெபிட் கார்டுகளை போன் கால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாக பிளாக் செய்து கொள்வதற்கான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு SBI வழங்கி வருகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
SBI வங்கி:
இந்தியாவில் உள்ள வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தற்போது உள்ள மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறி விட்டது. தேவைக்கு அப்பாற்பட்ட பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற நோக்கத்தில் பலரும் தற்போது வங்கிகளில் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லை பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் முதலிடத்தில் இருப்பது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். இதன் மூலம் குறைந்த காலத்திற்கு உங்களது சேமிப்புப் பணத்தை இரண்டாக மாற்றி விடலாம்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ தரிசனம்!
இந்த நிலையில் SBI வங்கியில் டெபிட் கார்டு வைத்து உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் இந்த தொகுப்பு உங்களுக்கு தான். இந்த தொகுப்பில் தற்போது SBI வங்கியின் டெபிட் கார்டை எவ்வாறு பிளாக் செய்வது என்பதை கீழே வரும் தொகுப்பில் முழுமையாக பார்ப்போம். மேலும் உங்கள் கார்டுகளை நீங்களே ஏன் பிளாக் செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரும். ஒரு வேலை உங்கள் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது திருடு போய் விட்டாலோ இந்த திட்டம் உங்களுக்கு உதவி புரியும். மேலும் பிளாக் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கீழே பார்ப்போம்.
எஸ்பிஐ ஏடிஎம் கார்டை நீங்கள் பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியில் நீங்கள் ரெஜிஸ்டர் செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து 567676 என்ற எண்ணுக்கு “BLOCK டெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்கள்’’ குறிப்பிட்டு மெசேஜ் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் தொலைத்த டெபிட் கார்டின் கடைசி 4 நம்பர்கள் 9638 என்று வைத்துக் கொண்டால், BLOCK 9638 என்று மெசேஜ் டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எஸ்எம்எஸ் வாயிலாக உங்கள் டெபிட் கார்டை லாக் செய்து கொள்ளலாம். மேலும் இலவச ஐவிஆர் சேவை எண்-ஐ தொடர்பு கொள்வதன் மூலமாகவும் அதைச் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் புதிய ஏடிஎம் கார்டு பெறவும் அதன் மூலமாகவே விண்ணப்பித்து கொள்ளலாம். வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் SBI வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.