தமிழக அரசில் ஓய்வு பெற உள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – பலன்கள் கிடைப்பதில் சிக்கல்?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு 60 ஆக உயர்த்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதால் இன்னும் பணப்பலன்கள் குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அரசு ஊழியர்கள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. மேலும், ஈட்டிய விடுப்பு ஊதியமும் இரண்டு ஆண்டுகளாக ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்தப் பண பலன்களையும் பெறவில்லை.
Exams Daily Mobile App Download
இதனால் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக அரசு அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 59 வயதில் இருந்து ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது . ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் இந்த மே, ஜூன் மாதங்களில் ஓய்வு பெற இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
ஆனால் இந்த ஓய்வு பெறப்போகும் அரசு ஊழியர்களுக்கு பண பலன்கள் வழங்குவதில் குறிப்பாக பண பலன்கள் தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதனால் 60 வயதை எட்டி ஓய்வு பெற தயாராக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பண பலன்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு பண பலன்கள் வழங்குவதற்காகவே அரசு நிதிகளை ஒதுக்கி உள்ளனர். இதனால் ஓய்வு பலன்களை பெறுவதில் எந்தவித சிரமமும் இருக்காது எனவும் கருதப்படுகிறது. ஆனால் பண பலன்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.