தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் மேலும் பொதுத்தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியதும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021 செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நேரத்தில் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்றது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகளும் படிப்படியாக குறைந்தது.

Exams Daily Mobile App Download

பொதுத் தேர்வுகள், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்த திட்டமிட[ப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த மே 2ம் தேதி 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி மே 13ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து மே14ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் ஜூன் 14ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ் – மூன்று நாட்கள் கடைகளுக்கு விடுமுறை?

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 1 – 5ம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால் பள்ளி வேலை நேரம் மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கல்வியாண்டில் 12 ம் வகுப்புக்கு 2023 மார்ச் 13ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு 2023 மார்ச் 14 தேதியும், 10ம் வகுப்பிற்கு ஏப்ரல் 3 ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாட புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!