PM KISAN திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – e-KYC செயல்முறையை முடிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
PM கிசானின் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை விவசாயிகள் பெற விரும்பினால் கட்டாயமாக e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். மேலும், e-KYC செயல்முறையை முடிக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
e-KYC செயல்முறை:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற்று வருகின்றனர். அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டுமே ரூ.6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதியுதவியை விவசாயிகள் பெற்றுவிட்டனர். இந்நிலையில், 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே, 12 ஆவது தவணைக்கான நிதியுதவி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விவசாயிகள் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும். மேலும், e-KYC செயல்முறையை முடிக்க ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் e-KYC செயல்முறையை முடிக்க சில நாட்களே இருப்பதால் விரைவில் முடிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஆக.26) ‘இந்த’ ஏரியாக்களில் Power Cut – முழு தகவல் இதோ!
Exams Daily Mobile App Download
e-KYC செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு 12 ஆவது தவணை வழங்கப்படாது. தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக e-KYC செயல்முறையை முடிப்பது என்பதை பார்க்கலாம். முதலில், PM கிசானின் அதிகாரபூர்வமான இணையதள pmkisan.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று ஃபார்மர் கார்னரில் உள்ள e-kyc என்கிற பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் e-kyc என்பதை கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர், PM கிசான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை பதிவு செய்துவிட்டால் e-kyc செயல்முறையை முடித்துவிடலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்