PM கிசான் பயனாளிகள் கவனத்திற்கு – eKYC காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு!

0
PM கிசான் பயனாளிகள் கவனத்திற்கு - eKYC காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு!
PM கிசான் பயனாளிகள் கவனத்திற்கு - eKYC காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு!
PM கிசான் பயனாளிகள் கவனத்திற்கு – eKYC காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிப்பு!

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் பயனாளிகள் eKYC செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

eKYC காலக்கெடு

நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசாங்கம் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவியை அளித்து வருகிறது. இந்த தொகை 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 என்ற அடிப்படையில் 3 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கிஷான் திட்டத்திற்கான 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இருப்பினும் ஒரு சில விவசாயிகள் இந்த தவணைப்பணத்தை பெறவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர். இதற்கு eKYC செயல்முறையை முடிக்காதது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வகையில் கிஷான் திட்டத்தின் கீழ் 12வது நிதியுதவியை பெறுவதற்காக பயனாளிகள் கட்டாய eKYCஐ முடித்திருக்க வேண்டும். இந்த செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின் படி, ‘PMKISAN பயனாளிகள் அனைவருக்கும் eKYC காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை eKYC செயல்முறையை மேற்கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது e-KYC செயல்முறையை முடிப்பதற்கான விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • முதலாவதாக https://pmkisan.gov.in/ என்ற PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தை திறக்கவும்.
  • இப்போது வலது பக்கத்தில் கிடைக்கும் eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • அங்கு ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடல் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • பிறகு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
  • தொடர்ந்து ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்து OTP ஐ உள்ளிடவும்.
  • அனைத்து விவரங்களும் பொருந்தினால், eKYC செயல்முறை முடிக்கப்படும்.
    இல்லையெனில், அது தவறானதாக குறிக்கப்படும்.

PM KISAN 11வது தவணை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க:

  • PM Kisan திட்டத்தின் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை திறக்கவும்
  • இப்போது வலது மூலையில் உள்ள ‘பயனாளி நிலை’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளிடவும்.
  • இதில் ‘தரவு பெறு’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • இப்போது பயனாளியின் சேமிப்பு நிலை விரிவாக காட்டப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!