Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – லாபம் தரும் சூப்பர் திட்டம்!
அஞ்சலகத்தில் நடைமுறையில் உள்ள நிலையான வைப்பு நிதி (FD) சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக பணத்தை சேமிக்கலாம். இத்திட்டத்தில் வரி விலக்கு சலுகை உள்ளது.
வைப்பு நிதி திட்டம்:
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்களும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன் பெறும் வகையில் உள்ளதால் சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சிறந்த வட்டியும், வரி சலுகையும் வழங்கப்படுவதால் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள்!
மற்ற திட்டங்களை தொடர்ந்து நிலையான வைப்பு நிதி சேமிப்பு திட்டமும் நல்லதொரு லாபத்தை அளிக்க கூடிய திட்டமாகும். இத்திட்டத்தில் கணக்கு தொடங்குவது மிகவும் எளிதானது. மேலும் இதில் நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் கணக்கு தொடங்கலாம். மேலும் அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் வரம்பு இல்லை. நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஆன்லைன் மூலம் மற்றும் ஆப்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.
கூடுதல் சலுகையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான FDக்கு 5.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இதையடுத்து 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கும் கிடைக்கும். இது தவிர, 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.50 சதவீதம் வட்டி கிடைக்கும். 3 வருடங்கள் ஒரு நாள் முதல் 5 வருடங்கள் வரை FDக்கு 6.70 சதவீத வட்டி கிடைக்கும்.