வாகன ஓட்டிகளே உஷார் உஷார்.. இனி 3 வருஷம் ஜெயில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் – அரசு உத்தரவு!

0
வாகன ஓட்டிகளே உஷார் உஷார்.. இனி 3 வருஷம் ஜெயில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் - அரசு உத்தரவு!
வாகன ஓட்டிகளே உஷார் உஷார்.. இனி 3 வருஷம் ஜெயில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் - அரசு உத்தரவு!
வாகன ஓட்டிகளே உஷார் உஷார்.. இனி 3 வருஷம் ஜெயில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் – அரசு உத்தரவு!

என்ன தான் அரசு தீவிரமாக சாலை விதிமுறைகளை அமல்படுத்தினாலும் விபத்து என்பது ஒரு சில வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் நடந்துவிடுகிறது. அதற்கு சற்றும் இடம் கொடுக்காத வகையில் புதுச்சேரி அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

முக்கால்வாசி சாலை விபத்துகள் வாகன ஓட்டிகளின் மெத்தன போக்கால் தான் நிகழ்கிறது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களால் நாள்தோரும் பலர் மரணத்தை தழுவுகின்றனர். இதை முற்றிலும் ஒழிக்க புதுச்சேரி அரசு தற்போது முக்கிய கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.

அதாவது புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசுவது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்ற செயல்களை யாரேனும் செய்தால் வாகனம் ஓட்டியவர் மற்றும் பயணித்தவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளியே போறீங்களா? கண்டிப்பா குடை எடுத்துக்கோங்க! .. கனமழை வெளுத்து வாங்கும்!

Exams Daily Mobile App Download

மேலும் சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்பது விதி. அந்த விதியை மீறும் சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் சிறுவர்கள் ஒட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தை தடுக்க புதுச்சேரி அரசின் இந்த தடாலடி நடவடிக்கை தற்போது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!