வெளியே போறீங்களா? கண்டிப்பா குடை எடுத்துக்கோங்க! .. கனமழை வெளுத்து வாங்கும்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சற்று அதிகமாக இருந்து வந்த நிலையில், இனி வரும் 3 நாட்களும் கிட்டத்தட்ட 27 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள், சிறிது மழை வந்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கப்பட தொடங்கினர். மக்களின் மனக்குமுறலை கேட்ட வருணன் மழையை நேற்று முதல் தமிழகத்தில் கொட்ட தொடங்கியுள்ளார். நேற்று இரவு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதைத்தவிர, நீலகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, கடலூர், வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விருதுநகர், இராமநாதபுரம் போன்ற அநேக மாவட்டங்களில் கனமழை இன்று தொடங்கி அடுத்து வரும் 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு – விடுமுறைகள் ஓவர்!
Exams Daily Mobile App Download
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்