மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா (பி.ஏ. எம்.எஸ்), கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி.,) படிப்புகளை படிக்க விரும்பும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிப்பு:
தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேத (பி.ஏ. எம்.எஸ்), கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி.,) படிப்புகளை படிக்க விரும்புபவர்கள் இன்று முதல் சென்டாக்கின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.centacpuducherry.in நவம்பர் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அரசு மற்றும் நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ.,மற்றும் சுயநிதி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்கள் தனியார் நிர்வாக இடங்களுக்கு விண்ணப்பிக்க 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ., இடங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீட் அடிப்படையிலான படிப்புகளுக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்