IT துறையில் பணியாற்றுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஐ டி துறையில் சமீப காலமாக மூன்லைட்டிங் குறித்த விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.
ஐ டி நிறுவனம்:
இந்தியாவில் சமீப காலமாக இளம் தலைமுறையினரிடம் ஐடி வேலை மோகம் அதிகரித்து வருகிறது. அதாவது அதிக ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இந்த துறையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த துறையில் பணியாற்றும் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஐடி துறையில் வேலைக்கு சேர்வதில் இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐ டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் பேட்டி!
மேலும் இந்த துறையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்லைட்டிங் சிஸ்டம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை முன்வைத்துள்ளது. இதையடுத்து பிற முன்னணி ஐடி நிறுவனங்களுடன் சேர்ந்து moonlighting கொள்கையை எதிர்த்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பள உயர்வு குறித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் தற்போது அமெரிக்க பொருளாதாரத்தின் மந்த நிலை பாதிப்புக் காரணமாக லாபத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதனை சமாளிக்க இத்தகைய ஐ டி நிறுவனங்கள் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது ஊழியர்களுக்கான முதல் வருட சம்பள உயர்வை வழங்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதத்திற்கு முன்பு ஒரு வருடத்தை முடித்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என டிசிஎஸ் தனது ஈமெயிலில் விளக்கம் கொடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
மூன்லைடிங் என்பது இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு திட்டமல்ல, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டே அவர்களுக்கு தெலியாமல்
மற்றொரு நிறுவனத்துக்கும் பணி புரிவதே மூன்லைடிங் என்பதாகும். வொர்க் ஃப்ரம் ஹோம் வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஏமாற்று வேலையை சிலர் செய்துவந்தனர்