தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உணவு பொருட்கள் மிகவும் குறைவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கடை
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயற்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகள் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 173 ரயில்கள் ரத்து? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை (UPI) மூலமாகப் பணம் அனுப்பும் வசதி வர உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை தேர்வு செய்து, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதன்பின்பு தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இத்திட்டம் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகளில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் அதிவேகமான இணைய சேவையை Wifi மூலமாக கொண்டு வர முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் Wifi அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்