IRCTC ரயில் டிக்கெட் புக்கிங் செய்வோர் கவனத்திற்கு – வெயிட்டிங் உறுதிபடுத்தப்படுமா? முக்கிய தகவல்கள்!
இந்திய ரயில்வே வாரியம் 4 மாதங்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் சில நேரங்களில் திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும், அந்த சமயத்தில் உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காது. தற்போது உங்களின் உறுதிப்படுத்தப்படுமா என்பதை அறிய IRCTC ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போது வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது IRCTC நிறுவனம் ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி IRCTC என்ற ஆப் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
அதன்படி மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் டிக்கெட்டுகளை 4 மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் திடீரென்று பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் புக்கிங் செய்தால் உங்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படாது. அதனால் உங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருப்பீர்கள். இந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு IRCTC ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பயன்படுத்தி உங்களின் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வழிமுறைகள்
1. இதற்கு முதலில் IRCTC இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இப்போது உங்களின் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
3. இதையடுத்து ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும். அதன் பிறகு ‘உறுதிப்படுத்தல் வாய்ப்பை பெற இங்கே கிளிக் செய்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. அடுத்ததாக உங்கள் காத்திருப்பு டிக்கெட்டின் பிஎன்ஆர் எண்ணை உள்ளிட வேண்டும்.
5. இறுதியாக உங்கள் திரையில் ரயில் டிக்கெட்டின் உறுதிப்படுத்தல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.