தமிழக அரசு ஊழியர்களுக்கான மனிதவள சீரமைப்புக் குழு அமைப்பு – வலுக்கும் எதிர்ப்புகள்.. அரசு விளக்கம்!
தமிழகத்தில் அரசாணை (நிலை) எண்.115-ன்படி மனிதவள சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் பிற தரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அரசாணை 115 குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மனிதவள சீரமைப்புக் குழு:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களை போல அகவிலைப்படி வழங்க வேண்டும். மேலும் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, அதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகைகளை குறைக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 115ன் படி மனிதவள சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட 5 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Instagram Update.. களமிறங்கும் அசத்தல் அம்சம் – இனி உங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்!
Exams Daily Mobile App Download
இந்த குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மனிதவள சீரமைப்புக் குழு அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்துவதையும், செம்மைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு குழு அமைக்கப்பட்டாலும் அதன் பரிந்துரைகள் பணியாளர் சங்கங்களின் கருத்துகளை கேட்ட பிறகே உறுதிப்படுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.