தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் டெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
டெட் தேர்வு:
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி வாயிலாக நடைபெற்றது. அடுத்தாக 2ம் தாள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான தேதி அறிவிப்பை தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை என்று குற்ற சாட்டு எழுந்தது. இதனை ஆராய்ந்து உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியது.
NVS வேலைவாய்ப்பு 2022 – 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன் தமிழக ஆசிரியர் ஆட்கள் சேர்ப்பு வாரியம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வான (TET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.