OLA, UBER பயன்படுத்துவோர் கவனத்திற்கு – வெளியான அதிரடி உத்தரவு!!! இனி கவலை வேண்டாம்!!
தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் பொதுமக்கள் OLA, UBER செயலி மூலமாக ஆட்டோ அல்லது கார்களில் செல்ல முன்பதிவு செய்து வருகிறார்கள். தற்போது இதில் ஏற்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
OLA, UBER பயணிகள்
தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் OLA, UBER மூலமாக ஆட்டோ அல்லது கார்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் குறித்த நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும். இதனாலேயே பெரும்பாலானோர் இந்த டாக்சி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில் நன்மைகள் கிடைத்தாலும் ஒரு சில நேரத்தில் பயணிகளுக்கு சிக்கல்களும் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது பயணிகள் தற்போது ஊருக்கு உட்புறமாக தொலைதூரத்தில் இருந்து கொண்டு முன்பதிவு செய்யும் போது சில நேரங்களில் முன்பதிவை ஓட்டுநர்கள் ரத்து செய்வதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதே போல் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தாமல் நேரடியாக கைகளில் பணத்தை தரும் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் அவதி அவதியாக பேருந்துக்கோ அல்லது ரயில்களுக்கோ செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இனி நகர, மாநகர சபை கூட்டம் – அரசு முடிவு.. பொதுமக்கள் வரவேற்பு!
Follow our Instagram for more Latest Updates
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மூலக்காரணமாக இருப்பது ஓட்டுநர்கள் மட்டுமே. அதன்படி தற்போது இவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்றை தமிழக போக்குவரத்துத்துறை பிறப்பித்துள்ளது. அதாவது பயணிகள் முன்பதிவு செய்துள்ளதை ஆட்டோ ஓட்டுநர்கள் ரத்து செய்தால் அவர்களுக்கு ரூ.50ம், இதே போல் கார் ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ரூ.100ம் அபராதமாக செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்போது இந்த நடைமுறை அமலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.