தமிழகத்தில் இனி நகர, மாநகர சபை கூட்டம் – அரசு முடிவு.. பொதுமக்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் ஆண்டு தோறும் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய தினங்களில் கிராம சபை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகர, மாநகர சபை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
நகர சபை:
தமிழகத்தில் கிராமப்புற மக்களின் தேவைகளை கண்டறியவும் அவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கும் நோக்குடன் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சபையானது தொழிலாளர்கள் தினம், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு முதல் நவ.1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்ள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி தமிழகத்தில் வரும் நவ.1 ம் தேதி உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்தில் மக்களுக்கான புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், கண்காட்சிகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம சபையை போல இனி தமிழகத்தில் நகர மற்றும் மாநகர சபைகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
CA 2022 நவம்பர் மாத தேர்வு ஒத்திவைப்பு ..புதிய தேதியில் தேர்வுகள் – அறிவிப்பு வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
நகர மற்றும் மாநகர வளர்ச்சிக்காக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் கட்டமாக நவ.1 உள்ளாட்சி தினத்தன்று சென்னை பல்லாவரம் வார்டில் மாநகர சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறியவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒவ்வொரு வார்டுக்கும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்த வார்டின் கவுன்சிலர் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.