வேலை பறிபோகும் அபாயம்.. பதற்றத்தில் ஐடி ஊழியர்கள் – மிகுந்த கண்டிப்பாகும் நிறுவனங்கள்!
இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் நல்ல முறையில் லாபம் அடைந்து வருகின்றன. தற்போது தங்களது ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகளை நிறுவனங்கள் விதித்துள்ளது. இதனால் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள்:
கொரோனா கால ஊரடங்கின் போதும் எந்த வித சிக்கலும் இல்லாமல், வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக செயலாற்றி வந்த ஒரு துறை என்றால் அது ஐடி துறை தான். ஐடி ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த காரணத்தால் தான் இந்த சிறப்பான பலனை அடைய முடிந்தது. இந்நிலையில், ஊரடங்கு சமயத்தில் பணி நேரம் போக மற்ற நேரங்களில் வேறு சில நிறுவனங்களில் ஊழியர்கள் பணியாற்றும் Moonlighting முறையும் பழக்கத்தில் வந்தது.
ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாத நிறுவனங்கள் தற்போது மிகவும் பரவலாக Moonlighting செயல்பாட்டில் உள்ளதால், இதை முக்கிய பிரச்சனையாக எடுத்துள்ளனர். இதனால் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளனர். அதன்படி, Moonlighting செய்யப்படும் ஊழியர்கள் கவனிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
நிறுவனங்கள் Moonlighting செய்வதால் ஊழியர்களின் திறன் குறைவதாகவும், பணி சார்ந்த விஷயங்களை யோசிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஊழியர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாது என்றும் நிறுவனங்கள்கருதுகின்றனர். இதனால் ஊழியர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்க படுவதாகவும் அதனையும் மீறி Moonlighting முறையில் ஈடு படும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்