தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்காக தமிழக அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை கூறியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
தமிழக விவசாயிகள்:
உலக நாடுகளிலேயே முதன் முதலில் விவசாயத்தை துவங்கியது நமது நாடான இந்தியா தான். மேலும் இந்தியாவில் தற்போது விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருந்து வருவது நமது மாநிலமான தமிழகம் மட்டுமே. மேலும் சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு விவசாயிகளுக்காக பல சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் முக்கியமாக விவசாயிகளின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்து உள்ளது. மேலும் அடுத்தாக, தற்போது ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த திட்டம் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தற்போது தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்காக 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ.டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, 53,420 மெ. டன் யூரியா, 10,900 மெ.டன் டிஏபி, 4,739 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 16,950 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த உரங்கள் எல்லாம் தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த வாரத்தில் கப்பல் வாயிலாக தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக வந்துள்ளது .
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேலும் இந்த நிலையில் விவசாயிகளுக்கு தர வேண்டிய உரங்களை ஒரு சிலர் மோசடி செய்து வருகின்றனர். அதனை சரி செய்வதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு ஆய்வுக்குழுவினர், உரக் கடைகளில் விற்கப்படும் உரத்தின் விலை மற்றும் உரம் விற்பனை செய்யும் போது வற்புறுத்தி இதர இணை பொருட்கள் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.