தினமும் ரூ.7 சேமித்தால் ரூ.60000 ஓய்வூதியம் – முதலீடு செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும், இந்த திட்டம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் இந்திய ஓய்வூதிய நிதிகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்துவதால், அரசாங்கம் அவர்களின் ஓய்வூதியத்தை உறுதி செய்யும். இதனால் தனிநபர்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் இல்லை.
முழு விவரம் இதோ:
அடல் பென்ஷன் யோஜனா (APY) ஜூன் 2015 ல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இந்தத் திட்டம் நிர்வகிக்கப்படுகிறது. APY திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் 60 வயதை அடைந்தவுடன் நிலையான ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள். வயதான காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய இது மக்களை ஊக்குவிக்கிறது. APY இன் கீழ் ஒரு கணக்கைத் திறக்கத் தகுதிபெற, தனிநபர்கள், இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 18-40க்குள் இருக்க வேண்டும் மற்றும் சரியான ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
இதை தொடர்ந்து தனிநபர்கள் செல்லுபடியாகும் வங்கி கணக்கு.கட்டாயம் ஆகும். இது வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள நபர்கள் அவர்களது 60 வயதின் போது இந்த திட்டத்தின் முழுமையான பலனையும் அனுபவிக்க முடியும். ஒரு பயனாளியின் மரணம் ஏற்பட்டால், அவருடைய/அவள் மனைவி இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு உரிமை உடையவராவார்.
மேலும் 18 வயது பூர்த்தியான ஒருவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்த பின்னர் 42 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.210 ஐ சந்தாவாக செலுத்த வேண்டும். இதன்மூலம் அந்நபர் ஓய்வு பெற்றபின் அதாவது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.5000ஐ பென்ஷனாக பெற முடியும். இந்த திட்டத்தில் சேர்ந்த அனைவரும் ஓய்வூதியம் பெறுவதற்கு தவறாமல் மாதந்தோறும் பிரீமியம் தொகை ரூ.210 ஐ செலுத்த வேண்டும்.
1 முதலில் நீங்கள் அடல் பென்ஷன் யோஜனாவின் தளத்திற்கு (https://enps.nsdl.com/eNPS/
2 அதைத்தொடர்ந்து உங்கள் சுயவிவர மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை கொண்டு தகவல்களை சரிப்பார்க்கலாம்.
ExamsDaily Mobile App Download
3.பின்னர் வங்கியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி எண்ணை பதிவிட வேண்டும், வங்கி கணக்கு விவரங்கள் முடிந்ததும் நாமினியாக யாரை நியமிக்க விரும்புகிறீர்களோ அவர்களை பற்றிய விவரங்களை பதிவிட்ட பின் செலுத்த விரும்பும் பிரீமியம் தொகையை தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர் இ-சைன் செய்ததும் உங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நிறைவடையும்.