திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவுறுத்தல்!
திருப்பதியில் நாளை ஸ்ராவன பவுர்ணமி அடுத்தாக ஆகஸ்ட் 12ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி என தொடர்ந்து விழாக்கள் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 15ம் தேதி வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து முக்கிய அறிவுரையையும் வழங்கியுள்ளது
திருப்பதி:
திருப்பதியில் கடந்த 8ம் தேதி பவித்ரோற்சவம் விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் வித்ர பிரதிஷ்டை நடைபெற்றது. மேலும் இன்றுடன் பவித்ரோற்சவம் முடிவடைய உள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதன் பிறகு அக்டோபர் 1ம் தேதி கருடசேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்நானம் என விழாவானது அக்டோபர் 5ம் தேதி நடைபெறும்.
Exams Daily Mobile App Download
இந்த பிரம்மோற்சவ விழாவானது 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாளை 11ம் தேதி ஸ்ராவன பௌர்ணமி, ஆகஸ்ட் 12ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதி, அடுத்தாக சனி மற்றும் ஞாயிறு, 15ம் தேதி சுதந்திர தினம் என தொடர்ந்து விடுமுறைகள் வருவதால் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். அதே போல இனி வரும் நாட்கள் விசேஷ நாட்களாக இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும் என்பதால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளை அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா செல்ல தடை – திடீர் அறிவிப்பு
முக்கிய நாட்களில் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனால் பக்தர்கள் பொறுமையாக கம்பார்ட்மெண்ட்களிலும், வரிசைகளிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். மேலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நடப்பாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 17ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.