இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா செல்ல தடை – திடீர் அறிவிப்பு!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் யாரும் நேபாளத்திற்கு வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலா செல்ல தடை:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும், கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதத்தில் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால், கட்டாயமாக பொதுமக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களையும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. மேலும், 1,28,261க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்தியா முழுக்க பொது இடங்கள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 16,047 பேருக்கு தொற்று
மேலும், இந்தியாவை தொடர்ந்து நேபாளத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா வருவதற்கு தடை என நேபாள அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள இந்திய சுற்றுலா பயணிகள் 4 பேரையும் இந்தியாவிற்கு உடனடியாக திரும்பும்படி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.