கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க இத!

0
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க இத!

வரும் மே 1ம் தேதி முதல் கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றுவதாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு:

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது சூப்பர் பிரீமியம் பிரைவேட் கிரெடிட் கார்டு தவிர அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் மாற்றம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

கொளுத்தும் வெயிலால் குழந்தைகளுக்கு பாதிப்பு – ஐநா எச்சரிக்கை!

இந்த மாற்றம் ஆனது மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் ரூ. 20,000 வரை செய்யும் ஆன்லைன் செலவுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 6 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரம்புக்கு கீழே உள்ள பில்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை என்றும், 1 சதவீத கிரெடிட் கார்டு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி இந்த வரம்புக்கு மேல் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!