மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வரம்பு நிர்ணயம் – GPF விதிகளில் பெரிய மாற்றம்!
மத்திய அரசு பணியாளர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உச்ச வரம்பு தொகை குறித்த மாற்றங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
GPF விதிகள்:
மத்திய அரசின் பணியாளர்கள் தங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வட்டி விகிதம் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்டு செலுத்தப்படுகிறது. ஊழியர்களின் தொகைக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. முன்னதாக பொதுவருங்கால வைப்பு நிதி திட்டத்தின் 1960ன் விதியின் படி, ஊழியரின் சம்பளத்தில் இருந்து 6% க்கும் குறைவாக GPF கணக்கிற்கு செலுத்த கூடாது.
கார்த்திகை தீப திருவிழாவிற்கான முன்னேற்ப்பாடு பணிகள் தீவிரம் – 2,692 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
Exams Daily Mobile App Download
மேலும், ஊழியர்கள் செலுத்தும் தொகைக்கான அதிகபட்ச உச்ச வரம்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது ஊழியர்கள் செலுத்தும் GPF கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது என்று புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வைப்பு தொகையில் இருந்து தேவைப்படும் போது குறிப்பிட்ட அளவிலான தொகையை எடுத்துக் கொள்ளலாம். அந்த தொகையை மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.