கார்த்திகை தீப திருவிழாவிற்கான முன்னேற்ப்பாடு பணிகள் தீவிரம் – 2,692 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
தமிழகத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கானவர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருவார்கள். நடப்பு ஆண்டில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் தீப திருவிழாவிற்காக வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிக அளவிலான மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, உணவு போன்ற ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம் – காஞ்சீபுரம் ஆட்சியர் அறிக்கை!
Exams Daily Mobile App Download
கார்த்திகை தீப திருவிழாவிற்கான ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 12 ஆயிரம் காவல் துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், மக்கள் பயண வசதியாக திருவண்ணாமலை கோவிலுக்கு அரசு போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில் 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.