CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!
இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்தேர்வு கடந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் எழுதியுள்ள 2ம் பருவத்தேர்வுக்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
கொரோனா பரவலின் முதல் அலையின் போது கடந்த 2020ம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இது நோய்பரவல் அதிகரித்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதே போல் கொரோனாவின் 2ம் அலையின் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 14 வரை 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தற்போது கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு இரண்டு பருவ தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டது. அதன்படி முதல் பருவத்தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதன் 2ம் பருவத்தேர்வு கடந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 24ஆம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதியும் முடிவடைய உள்ளது. இந்த இரண்டு பருவத் தேர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அத்துடன் மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு மதிப்பெண் சேர்க்கப்பட்டு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
TN TET தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TRB முக்கிய அறிவிப்பு!
அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட இப்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு ஆசிரியர் 35 விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகிறது. அத்துடன் விடைத்தாள்கள் முடிந்தவரையில் 2 முறை மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் தேர்வு முடிந்த குறுகிய காலத்தில் முடிவுகள் வெளியாகும். அதாவது ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.