TN TET தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TRB முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை டெட் முதல் மற்றும் இரண்டாம் தாள் எழுத 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
TET தேர்வு
தமிழகத்தில் கொரோனா அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் அரசு தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 18 வரை விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குட் நியூஸ் – தனிநபர் கடன் தொகை ரூ.10 லட்சம்!
ஆனால், இடையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் சிரமப்பட்டதை அடுத்து டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வார காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இந்த டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. இதில் முதல்நிலை ஆசிரியர்கள் பணிக்கு பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.Ed) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது, அந்த தேர்விற்கு ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இந்த தேர்வை எழுத கல்வி தகுதி மட்டுமே அவசியம், வயது வரம்பு கிடையாது. விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள்-1, தாள் – 2 பாடத்திட்டம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டெட் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தேர்வுகள் வரும் ஜூலை மாதம் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை டெட் தாள்-1, தாள் – 2 இரண்டும் சேர்த்து மொத்தம் 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.