வங்கிகளில் கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – ரெப்போ வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்தியாவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியன் ரிசர்வ் வங்கியும் தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ரெப்போ வட்டி உயர்வு
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு வகையான தொழில் துறைகள் பாதிப்படைந்து நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து அத்துடன் சேமிப்பையும் இழந்தனர். அதன் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். அதனால் வங்கிகளில் ஏராளமானோர் தங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்க தொடங்கினர். மேலும் வங்கிகளிலும் குறைந்த வட்டியில் கடன் தொகையை பெற முடிந்தது. மேலும் வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் பணத்தை கடன் பெறுவது வழக்கமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டிதான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. அத்துடன் நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். மேலும் தற்போது உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டம் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
IRCTCன் திட்டம் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாத்தியம் – முழு விவரம் இதோ!
அதன்படி இந்த கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, நாட்டில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால், ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தி 4.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் வங்கிகள் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும், அதாவது வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படும். அதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு EMI அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரெப்போ வட்டி உயர்வு கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.