அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – உமாங் ஆப் மூலம் எளிய சேவைகள்!
ரேஷன் கார்டுதாரர்கள், நியாயவிலைக் கடையில் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை பெறுவதற்கு ஏற்படும் சிரமங்கள் இல்லாமல் இனி வீட்டில் அமர்ந்தபடியே ரேஷனை முன்பதிவு செய்து கொள்ள உமாங் ஆப் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
உமாங் ஆப்
இன்றைய கால கட்டத்தில் அரசு வழங்கும் சேவைகள் எல்லாம் செயலிகள் மூலம் பெற்றுக்கொள்ளும் படி எளிதாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ரேஷன் தொடர்பான சேவைகளுக்காக உமாங் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியானது ரேஷன் கடைகளுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை பெறும் சிரமங்களை குறைக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால் UMANG செயலி மூலம், ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை அரசாங்க விலையில் எளிதாக ஆர்டர் செய்யலாம்.
ExamsDaily Mobile App Download
இதுவரை, இந்தியாவின் 22 மாநிலங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டில் ரேஷனை முன்பதிவு செய்வதோடு, பயனர்கள் அருகிலுள்ள கடையையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், பொருட்களின் விலையையும் சரிபார்க்கலாம். குறிப்பாக இதில் ரேஷன் கடையில் கிடைக்கும் அனைத்து பொருட்களின் விலைப்பட்டியலும் இருக்கும். மத்திய அரசு தொடங்கியுள்ள இந்தச் சேவையானது சாமானிய மக்களுக்கு நேரடியாகவும், நியாயமான விலையிலும் பொருட்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சரண் விடுப்பு, கருணை அடிப்படை பணி – வலுக்கும் கோரிக்கை!
UMANG செயலியின் இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப நியாயமான விலையில் பொருட்களை வாங்க முடியும். மேலும், கார்டுதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி 6 மாதங்களுக்கு அவர் வாங்கிய பொருட்களின் நிலைகளையும் சரிபார்க்கலாம். இந்த UMANG செயலி அனைத்து ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. எரிவாயு இணைப்பு முதல் ஓய்வூதியம், EPFO உள்ளிட்ட 127 துறைகளின் 841க்கும் மேற்பட்ட சேவைகள் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் 12 முக்கிய மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.