அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இவர்கள் பொருட்கள் வாங்க முடியாது!

0
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - இனி இவர்கள் பொருட்கள் வாங்க முடியாது!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - இனி இவர்கள் பொருட்கள் வாங்க முடியாது!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இவர்கள் பொருட்கள் வாங்க முடியாது!

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியற்ற நபர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருவதால் உத்தர பிரதேச மாநிலத்தில் சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு

இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். மேலும் தற்போது ரேஷன் பொருட்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் தகுதியற்ற பயனாளிகள் ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ரேஷன் பொருட்கள் பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு சில நிபந்தனைகளை வகுத்துள்ளது. இதில் முதலாவதாக ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் ரேஷன் கார்டுதாரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து குடும்பத் தலைவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பின் நோய்வாய்ப்பட்டு அவரின் குடும்ப வருமானம் 15,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் ரேஷன் பலன்களை பெற முடியும்.

Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!

மேலும் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் கட்டாயமாக தங்களின் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும். அதாவது நான்கு சக்கர வாகன வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர், வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!