அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இலவச ரேஷன் கிடையாது! அரசு அதிரடி அறிவிப்பு!

0
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - இனி இலவச ரேஷன் கிடையாது! அரசு அதிரடி அறிவிப்பு!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - இனி இலவச ரேஷன் கிடையாது! அரசு அதிரடி அறிவிப்பு!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இலவச ரேஷன் கிடையாது! அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலத்தில் இத்திட்டத்தில் பயன் அடைபவர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இலவச ரேஷன்

இந்தியாவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதையடுத்து பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து இருந்ததால் இத்திட்டம் மேலும் சில காலம் நீட்டிக்கப்பட்டது. இது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த சாமானிய மக்களுக்கு பேருதவியாக இருந்தது. அத்துடன் இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த நிலையில் இதனை நீட்டிப்பு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

SBI வங்கியில் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு – தகுதி, பயன்கள், செயல்முறை விவரங்கள்!

அதன்படி இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும் இத்திட்டம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு உத்தரவுப்படி, இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பொருட்கள் வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது. அத்துடன் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாயும், ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!