TNPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி அதற்கான போட்டித்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளுக்கான போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC

தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் கட்டமாக குரூப் 2, 2A தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது TNPSC குரூப் 5 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் நடைபெற்ற மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர் தெரிவு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. அதன் படி 05.09.2022 அன்று சென்னை 600 003, தேர்வாணைய சாலையில் உள்ள தனியார் பேருந்து மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இனி இலவச ரேஷன் கிடையாது! அரசு அதிரடி அறிவிப்பு!

இதனையடுத்து மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தரவரிசை எண், இட ஒதுக்கீடு போன்றவை காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்விற்கான அழைப்பாணை விண்ணப்பதாரர்களுக்கு தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. மேலும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என்றும் உறுதி அளிக்க இயலாது. இந்த கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!