9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆண்டு இறுதித்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!

0
9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஆண்டு இறுதித்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!
9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஆண்டு இறுதித்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!
9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆண்டு இறுதித்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில், தேசிய கல்விக் கொள்கை (NEP) பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய முறையில் தேர்வு நடத்தப்படும். வினாத்தாள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து 2023 பிப்ரவரி முதல் வாரத்தில் பல தேர்வு கேள்விகளின் அடிப்படையில் ஐந்து மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும் என்று இடைநிலைக் கல்வி அமைச்சர் கூறினார்

முக்கிய அறிவிப்பு:

உலகம் முழுவதையும் தன் கோரபிடியில் வைத்திருந்த கொரோனா தொற்று, இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு மட்டும் படிப் படியாக குறையத் தொடங்கின. இதன் காரணமாக பல மாநிலங்களில் மூடப்பட்டிருத்த பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன, இரண்டு வருடங்களுக்கு பிறகு ஆண்டு இறுதிதேர்வுகளும் நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உத்தரபிரதேச மத்யமிக் ஷிக்ஷா பரிஷத்தின் (UPMSP) கீழ் படிக்கும் அனைத்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

2022-23 கல்வி அமர்வில் இருந்து, உத்தரபிரதேச வாரியத்தின் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் புதிய முறையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுகளை எழுத வேண்டும். வினாத்தாள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இந்த அமர்வுக்கான உயர்நிலை மற்றும் இடைநிலை கல்வி காலண்டரை மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்தது. முதல் பிரிவில், 33% கேள்விகள் பல தேர்வு மற்றும் இரண்டாவது பிரிவில் 66% கேள்விகள் விளக்கமாக இருக்கும். முதல் பிரிவில் 30% மதிப்பெண்கள் கொண்ட பல தேர்வு கேள்விகள் OMR தாளில் பதிலளிக்கப்படும். இரண்டாவது பிரிவில் 70% மதிப்பெண்களுடன் கூடிய விளக்கமான கேள்விகள் இருக்கும், அவை விடைத்தாளில் பதிலளிக்கப்படும்.

1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 18 வரை பள்ளிகள் திறப்பு – கோடை விடுமுறை ரத்து?

இது குறித்து அம்மாநில இடைநிலைக் கல்வி அமைச்சர் குலாப் தேவி கூறியது, மாணவர்களின் தொடர் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக முதல் அமர்வு முழுவதும் நடைபெறும் ஐந்து தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவற்றில் மூன்று தேர்வுகள் பல தேர்வு வினா (MCQ) முறையின் அடிப்படையிலும், இரண்டு விளக்க வகை தேர்வுகளாகவும் இருக்கும். பாடத்திட்டத்தின்படி, ஜூலை மற்றும் நவம்பர் 2022 கடைசி வாரத்திலும், 2023 பிப்ரவரி முதல் வாரத்திலும் பல தேர்வு கேள்விகளின் அடிப்படையில் ஐந்து மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும் இதையடுத்து, 2022-23 கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!