1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 18 வரை பள்ளிகள் திறப்பு – கோடை விடுமுறை ரத்து?
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி வரை கற்றல் நடவடிக்கையை தொடர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான கோடை விடுமுறை என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
கோடை விடுமுறை
நடப்பு கல்வியாண்டு முடிவுக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி வரை திறந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டெல்லி அரசின் இந்த நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு டெல்லி கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Exams Daily Mobile App Download
இப்போது கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் கற்றல் இழப்பைச் சமாளிக்க இந்த கோடை வகுப்புகள் அவசியம் என்று கல்வித் துறை கூறியுள்ளது. இது குறித்து டெல்லி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 10 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோய் மற்றும் பள்ளிகள் மூடல் காரணமாக ஏற்பட்ட கற்றல் பற்றாக்குறையை ஈடுசெய்ய டெல்லியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூன் 18 வரை கோடைகால வகுப்புகளை தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் அஞ்சல் துறையில் டிகிரி படித்தவர்க்கு வேலை – 650 காலிப்பணியிடங்கள்..!
அந்த வகையில், ஜூன் 18 வரை கற்றல் காலத்தை நீட்டித்ததன் மூலம் கோடை விடுமுறைக்கு, அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இருப்பினும், கடுமையான வெப்பநிலையால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மாற்றியமைக்குமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, மே 11 முதல் ஜூன் 28, 2022 வரை கோடை விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், டெல்லி DoEன் முடிவிற்குப் பிறகு, இப்போது கோடை விடுமுறைகள் 10 நாட்களுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.