தமிழகத்தில் செல்லப்பிராணி வளர்ப்போர் கவனத்திற்கு – இதை செய்ய மறக்காதீங்க!

0
தமிழகத்தில் செல்லப்பிராணி வளர்ப்போர் கவனத்திற்கு - இதை செய்ய மறக்காதீங்க!
தமிழகத்தில் செல்லப்பிராணி வளர்ப்போர் கவனத்திற்கு - இதை செய்ய மறக்காதீங்க!
தமிழகத்தில் செல்லப்பிராணி வளர்ப்போர் கவனத்திற்கு – இதை செய்ய மறக்காதீங்க!

தமிழகத்தில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கட்டாயமாக செல்ல பிராணிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

செல்லப்பிராணி:

தமிழகத்தில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வீட்டில் எத்தனை வளர்க்கிறார்கள் என்கிற சரியான புள்ளி விவரங்கள் கிடைக்காத காரணத்தினால் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செல்லப் பிராணியை வளர்க்கும் உரிமையாளர்கள் ரூபாய் 50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – வயது வரம்பு, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

மேலும், இந்த புதிய அறிவிப்பு தமிழகம் முழுவதும் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, செல்லப்பிராணியின் உரிமையாளர்கள் கட்டாயமாக ஆன்லைனில் உரிமையாளரின் பெயர், அடையாள அட்டை, நாய் போட்டோ, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லப் பிராணிகளை விற்பனை செய்து வரும் கடைகள், தனியார் கிளினிக், இனவிருத்தி செய்யக்கூடியவர்கள் ஆகிய விபரங்களையும் ஆன்லைனில் இணைக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!