Tokyo Olympics: மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் அதிர்ச்சி தோல்வி!
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 7) பெண்களுக்கான கோல்ஃப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை அதிதி அசோக் தோல்வியை தழுவியுள்ளார்.
கோல்ஃப் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் (ஆகஸ்ட் 8) நிறைவு பெறுகிறது. அந்த வகையில் இப்போட்டிகள் துவங்கி 15 ஆவது நாளான இன்று (ஆகஸ்ட் 7) இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பெண்களுக்கான கோல்ஃப், ஆண்களுக்கான மல்யுத்தம், தடகள போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 41 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் – கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு!
இதில் இன்று அதிகாலை 4 மணியளவில் துவங்கி நடைபெற்று முடிந்துள்ள பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் அதிர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளார். முன்னதாக 4 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 2 ஆவது இடத்தை பெற்றிருந்த அதிதி அசோக் பதக்கத்துக்கான வாய்ப்பை உருவாக்கி இருந்தார். இதனிடையே அவர் பதக்கம் வெல்லுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் நூலிழையில் பதக்கத்தை நழுவ விட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மகளிர் கோல்ஃப் போட்டியில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 60 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவு சுற்றில் அதிதி அசோக் 4 ஆவது இடத்தை பிடித்திருந்தார். மறுபக்கத்தில் அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். நாளை நிறைவடையும் ஒலிம்பிக் 2020 போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் இன்றுடன் (ஆகஸ்ட் 7) முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.