தமிழகத்தில் 41 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் – கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட சுமார் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களே ஊதியம் வழங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு ஊதியம்
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் முக்கிய பல்கலைக்கழகங்களின் கீழ் பல்வேறு வகையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதாவது ஒவ்வொரு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களை சார்ந்தே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் அப்போதிருந்த அரசு அறிவித்த படி, பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த உறுப்பு கல்லூரிகளான 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேருக்கு தொற்று உறுதி- 617 பேர் உயிரிழப்பு!
இதையடுத்து அந்த கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் ஊதியம் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘தமிழக அரசின் அறிவிப்பின் கீழ் தமிழக முழுவதும் 41 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த உறுப்பு கல்லூரிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் அனைவரின் ஊதியமும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த 41 கல்லூரிகளில் வேலை செய்து வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும், அந்தந்த பல்கலைக்கழக பதிவாளரை அணுகி ஊதியத்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது