வங்க கடலில் உருவாகவிருக்கும் அசானி புயல் – துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் இன்று புதிதாக புதிய புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் கொளுத்தி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிக வெப்பத்தினால் வெப்பம் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அச்சாணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மீண்டும் ராஜா ராணி தொடரில் இணைய போகும் ஆலியா? அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
இந்து புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் மாலை வட ஆந்திரா, ஒடிசா கடற்கரைக்கு சென்று பின்னர் மேற்கு வங்கக் கடல் நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் இன்று புதிதாக புதிய புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில் கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதையடுத்து கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.