மீண்டும் ராஜா ராணி தொடரில் இணைய போகும் ஆலியா? அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன்2 தொடரிலிருந்து பிரசவத்திற்காக ஆலியா விலகினார். தற்போது மீண்டும் சில நாட்களில் ராஜா ராணி தொடரில் இணைய போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜா ராணி சீசன் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் மூலமாக அறிமுகமானவர் தான் ஆலியா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் எனவும் இவருக்கு பதிலாக புதுமுக நடிகை அறிமுகமாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். நான் மட்டுமே ராஜா ராணி தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார்.
அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு துவங்க நினைப்பவர்கள் கவனத்திற்கு – தபால் துறை முக்கிய அறிவிப்பு!
பிரசவத்திற்காக செல்ல வேண்டி இருப்பதால் அந்த சில நாட்களுக்கு மட்டும் ரியா என்ற புதுமுக நடிகை சந்தியா அறிமுகமானார். ஆலியாவிற்கு தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் மீண்டும் சீரியலில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சீரியலில் இணையப் போவதில்லை எனவும் ரியா மட்டுமே இனி ராஜா ராணி தொடரில் நடிப்பார் எனவும் கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
ஆலியா மட்டுமே சந்தியா கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனவும் மீண்டும் ராஜா ராணி தொடரில் ஆலியா இணையும் படியும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா கேள்வி கேட்டு அதற்குரிய பதிலை கூறும்படியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் எப்போது மீண்டும் சீரியலில் இணைய போகிறீர்கள் என்ற கேள்விக்கு கூடியவிரைவில் தொடரில் நடிக்க இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எப்போது மீண்டும் ராஜா ராணி தொடரில் இணைய போகிறார் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.