அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை – அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! டெங்குவால் அசாம் நகராட்சி முடிவு!
அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் அசாம் மாநிலத்தில் உள்ள திபு முனிசிபல் போர்டு மற்றும் கிரேட்டர் டிபு டவுன் பகுதி நகராட்சி அங்கு உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 1 வாரம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
நாட்டில் கொரோனா தொற்று குறைந்த காலத்தில் இருந்தே அடுத்தடுத்து பல நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. சமீபத்தில் தான் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. அதே போன்று தற்போது அசாம் மாநிலத்தில் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
குறிப்பாக அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக டெங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறை அதிகாரிகள் காய்ச்சல் அதிகமாக பரவும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதனால் அசாமின் திபு முனிசிபல் போர்டு மற்றும் கிரேட்டர் டிபு டவுன் பகுதிக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (07.11.2022) முதல் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நோய் தோற்று அடுத்து அதிகரிக்காத வண்ணம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.