உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!
இந்தியாவில் சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் இருந்து வரும் நிலையில், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
நீதிமன்றம் தீர்ப்பு:
இந்திய அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையை வைத்து தான் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் உயர்சாதியில் இருக்கும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில் 10 சதவீத இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு மீண்டு வரும் டெல்லி – திறக்கப்படும் பள்ளிகள்!!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மேலும் 10% இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தினை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் குறிப்பிட்ட பிரிவினரை சேர்த்து மற்றவர்களை விடுவித்தது விதிமீறல் இல்லை என நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இந்த தீர்ப்பிற்கு நீதிபதி பேலா திரிவேதி, நீதிபதி பர்திவாலா ஆதரவு தெரிவித்துள்ளனர்.