Airtel வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களில் மாற்றம்!
முன்னணி நிறுவனமான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ப்ரீபெய்ட் சலுகை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதனால் அந்த நிறுவன வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏர்டெல்:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று பாரதி ஏர்டெல் நிறுவனம். ஏர்டெல் நிறுவனமானது குறைந்த விலையில் பல சிறப்பு திட்டங்களை, ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு என அனைத்திலும் வழங்கி வந்தது தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Capgemini நிறுவனத்தில் 65000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.49 க்கான திட்டத்தை நீக்கியுள்ளது. இனி ஆரம்பகட்ட திட்டமே ரூ.99 என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு SMS சேவைகள் வழங்கப்படாது. SMS பலன்களை வழங்கும் திட்டங்களானது தற்போது ரூ.179 க்கு தொடங்குகிறது. இந்த திட்டமானது முன்னதாக ரூ.149 க்கு இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. நாள் ஒன்றுக்கு 1 gb டேட்டா வழங்கி வந்த ரூ.219 க்கான திட்டமானது தற்போது ரூ.265 என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சவரனுக்கு ரூ.136 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கி வந்த ரூ.598 க்கான திட்டமானது தற்போது ரூ. 719 என மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5gb டேட்டா என 84 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. இதே போல் மற்ற திட்டங்களும் 20 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய விலை பட்டியலானது வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.